SMALL WORLD, BIG CALL! குட்டி உலகம் பெரிய அழைப்பு!

Small World Big Call
Small World, Big Call!

பூமியானதோ வெறுமையும் ஒழுங்கின்மையுமாகத் தான் இருந்தது. ஆனால், கர்த்தர் நிறைவை பேசினார்; அவை உண்டாயின. பிரதான படைப்பாகிய மனிதனை உண்டாக்கி, பலுகிப் பெருகி பூமியை நிரப்பி அதனை ஆண்டுக்கொள்ளவும் சொன்னார். பரந்து விரிந்துள்ள பூமியை ஆண்டுக்கொள்ள வேண்டும் என்பதே மனிதனுக்காக தேவன் கூறின கட்டளை. ஆனால், அவனுக்கென்றே ஏற்படுத்திய ஏதேன் தோட்டத்தை காப்பதும் பண்படுத்துவதுமே அவனுக்கென்று நியமித்த வேலை. அநேக நேரத்தில் இக்குட்டி உலகத்துக்குள் இருந்துக்கொண்டு பெரிய இலட்சியத்தை நாம் எப்படி அடைய முடியும் என்று நினைக்கிறோம்; திகைக்கிறோம்; தவறான முடிவுகளை எடுக்கிறோம். தேவனுடைய வார்த்தையை மீறின ஆதாமையும் ஏவாளையும் போல் இல்லாமல், தினம் தோறும் தேவனுடைய சத்தத்தை கேட்டு அவர் நமக்கென்றே அமைத்துக்கொடுத்த ஏதேன் தோட்டமாகிய குடும்பம், வேலை ஸ்தலம், சமுதாயத்தை பண்படுத்தி, காக்கும் பொழுது ஆண்டவர் நமக்கென்று நியமித்த பிரதான அழைப்பையும் நிறைவேற்றி நம்முடைய இலக்கையும் அடைகிறவர்களாக இருப்போம்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedIn

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *